
தண்டியலங்காரம்
தண்டியலங்காரம்
தண்டியலங்காரம், தண்டி என்பவரால் பொ.யு. 946-1070 காலப்பகுதியில் எழுதப்பட்ட, தமிழின் மிகச்சிறந்த அணி இலக்கண நூலாகும் வடமொழியின் காவிய தரிசத்தை அடியொற்றி, பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவுகளில் செய்யுள், காப்பிய, அணி இலக்கணங்களை விரிவாக விளக்குகிறது. இது தன்மையணி முதல் பாவிக அணி வரை 35 பொருளணிகளை விளக்குகிறது. இந்நூல் மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது: பொதுவணியியல்: 25 நூற்பாக்களுடன் செய்யுள் வகை, காப்பிய இலக்கணம், மற்றும் செய்யுள் நெறிகளைக் கூறுகின்றது. பொருளணியியல்:தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. சொல்லணியியல்: மடக்கு அணி மற்றும் சித்திரக்கவி போன்ற சொல்லணிகள், வழு, மலைவு பற்றிக் கூறுகிறது. இதனை இயற்றியவர் தண்டி ஆசிரியர் ஆவார், இது கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தமிழில் அணி இலக்கணத்தை விளக்கும் முக்கிய நூல்களில் ஒன்று, காப்பியம் மற்றும் செய்யுள் எழுதுபவர்களுக்கும், இலக்கிய மாணவர்களுக்கும் அணி இலக்கணத்தை அறிந்துகொள்ள பெரிதும் பயன்படுகிறது.
முனைவர் ரமணியின் ஒலிவடிவத்தில் நூல் வழங்கப்படுகிறது.
Praise
