{"product_id":"book-hjf8","title":"தொடாத வாலிபம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cem\u003eசுரதா\u003c\/em\u003e\u003c\/strong\u003e (\u003cem\u003eSuratha\u003c\/em\u003e; 23 நவம்பர் 1921 - 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை \u003cstrong\u003eசுப்புரத்னதாசன்\u003c\/strong\u003e என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக \u003cem\u003eசுரதா\u003c\/em\u003e என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை \u003cstrong\u003eஉவமைக் கவிஞர்\u003c\/strong\u003e என்று சிறப்பித்துக் கூறுவர்.\u003c\/p\u003e\u003cp\u003eமுத்தமிழின் தன்மைகளான இயற்போக்கு, இசைப்போக்கு, நாடகப்போக்கு ஆகிய மூன்றினையும் தொடாத வாலிபம் என்ற நூலில் சுரதா அழகுற நடமாடவிட்டிருக்கிறார். நாடகப் போக்கினை உணர்த்தி நிற்கும் தொடாத வாலிபம் என்ற தலைப்பு சிறப்புப் பெற்று இ ந் நூல் முழுவதையுமே உணர்த்தி நிற்கும் தலைப்பாகக் காட்சியளிக்கிறது. கவிதைப் பகுதியும் கட்டுரைப் பகுதியும் நாடகப் பகுதியும் இயற்கை எழிலையும் தமிழார்வத்தையும் தமிழகப் பெருமையையும் சீர்திருத்த நோக்கத்தையும் பகுத்தறிவு நெறியினையும் உரிமை வேட்கையையும் படிப்போர் உள்ளத்தே கிளரும் தன்மையனவாக விளங்குகின்றன.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49410689237296,"sku":"BDhjf8","price":6.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/hjf8-Square-cover.jpg?v=1773647526","url":"https:\/\/downpour.com\/products\/book-hjf8","provider":"Downpour","version":"1.0","type":"link"}