{"product_id":"book-g55h","title":"Nanmanikkatikai Nanarpathu","description":"\u003cp\u003e\u003cstrong\u003eநான்மணிக்கடிகை\u003c\/strong\u003e பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இஃது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது. இந்நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துகள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் நூற்று நான்கு பாடல்கள் உள்ளன.\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003eஇன்னா நாற்பது\u003c\/strong\u003e என்னும் நூல் கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்டது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.\u003c\/p\u003e\u003cp\u003eபூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் \u003cstrong\u003eஇனியவை நாற்பது\u003c\/strong\u003e. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.\u003c\/p\u003e\u003cp\u003eபதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் \u003cstrong\u003eகளவழி நாற்பது\u003c\/strong\u003e. சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந் நூல். இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர்.\u003c\/p\u003e\u003cp\u003eபண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49417258434864,"sku":"BDg55h","price":4.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/g55h-Square-cover.jpg?v=1773470138","url":"https:\/\/downpour.com\/products\/book-g55h","provider":"Downpour","version":"1.0","type":"link"}