{"product_id":"book-1t8n","title":"பழ‌மொழி நானூறு","description":"\u003cp\u003eபழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும். சங்க காலத்தினைப் பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது. இதன் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.\u003c\/p\u003e\u003cp\u003eரமணி ஒலிநூலகத்தில் நானூறு பாடல்களும் வெண்பாவுக்குரிய செப்பலோசையில் அமைந்துள்ளன. இது யாப்போசை மீட்டெடுப்பு எனும் செயல் திட்டத்தின்பாற்பட்டதாகும்.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":66850848932144,"sku":"BD1t8n","price":5.94,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/1t8n-Square-cover.png?v=1779481498","url":"https:\/\/downpour.com\/products\/book-1t8n","provider":"Downpour","version":"1.0","type":"link"}